கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி இழக்கும் அபாயம்: வெளியான மக்கள் கருத்துக்கணிப்பு
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டு மக்களிடையே வலுப்பெற்று வருகின்றது.
கனடாவில் மக்கள் சனத்தொகையில் ஐந்தில் ஒருவர் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர் என கருத்துக்கணிப்பு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் சூழல் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில் அவர் தனது பதவியை இழக்க நேரிடலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் பதவி
இதனால், சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அடுத்த தேர்தல் நடைபெறும் 2025 வரை அவர் பிரதமர் பதவியில் இருப்பாரா என்பதிலேயே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சொந்தக் கட்சியில் எதிர்ப்பு அதிகரித்தாலும் கூட கூட்டணி ஆதரவு இரு்பபதாலேயே அவரால் இப்போது அதிகாரத்தில் இருக்க முடிகிறது. இருப்பினும், பிரதமர் பதவியில் இருந்து விலகினால் அது தோல்வியை ஒப்புக் கொண்டது போல ஆகிவிடும்.
அதன்பிறகு ட்ரூடோவுக்கு அரசியல் எதிர்காலமே இருக்காது என்பதால் அவர் பதவி விலக மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு விலைவாசி அதிகரிப்பு, வீட்டு வாடகை அதிகரிப்பு, பணவீக்கமும் மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில் மக்கள் அவர் மீது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அத்துடன் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரத்தில் இந்தியாவை குற்றஞ்சாட்டிய நிலையில் சர்வதேச அளவில் அவர் சர்ச்சையில் சிக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
