நிதியமைச்சை விட்டு வெளியேறுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கத்திற்கு முழுநேர நிதி அமைச்சர் தேவை என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சை வேறொரு அமைச்சருக்கு வழங்க வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க குறிப்பிட்டுள்ளார்.
புதிய நிதியமைச்சர்

ஜனாதிபதியின் கீழ் நிதி அமைச்சு இருப்பது தற்போது சரியான தீர்வல்ல. சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலை விரைவாக முடிக்க வேண்டும்.
உலக வங்கி விடுத்துள்ள அரசியல் திருத்தம் உள்ளிட்ட நிபந்தனைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வது தற்போதைய நிலையில் கட்டாயமாகும்.
சர்வதேச உதவிகள்

தற்போதுள்ள அரசாங்கமோ அல்லது புதிய அரசாங்கமோ இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க முடியாது.
நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்தால் பொருளாதார நெருக்கடியை இரண்டு வருடங்களுக்குள் திட்டமிட்டுத் தீர்க்க முடியும் என சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam