உப்பூறல் கிராமத்திற்குள் உட்புகுந்த காட்டு யானைகள்:பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை
திருகோணமலை ,வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் கிராமத்திற்குள் இன்று (17.1.2026) அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் சேதங்களை விளைவித்துள்ளன.
இதன்போது 15 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை காட்டு யானைகள் அழித்துள்ளது.
அத்தோடு வீடொன்று அங்கிருந்த உடமைகளை காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீட்டில் இருந்தோர் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
கோரிக்கை
தொடர்ச்சியாக தமது கிராமத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவது கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு யானை பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறும் பாதிக்கப்பட்ட தமக்கு நஷ்டஈட்டை பெற்றுத் தருமாறும் வெருகல் -உப்பூறல் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அண்ணாமலை, முத்துவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam