வீதி விபத்துக்களுக்கு காரணமாகும் காட்டு யானைகளின் செயற்பாடு: தடுக்க கோரும் நெடுந்தூரப் பயணிகள்

Sri Lankan Tamils Mullaitivu Northern Province of Sri Lanka
By Dharu May 03, 2024 05:39 AM GMT
Report
Courtesy: uky(ஊகி)

நெடுந்தூரப் பயணங்களில் மணலாற்றுப் பாதையினை பயன்படுத்தும் பயணிகள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.

வீதிகளில் உள்ள குறியீட்டுக் காட்டிகளை யானைகள் சேதமாக்கிப் போவதால் வளைவுகளைக் கொண்ட அந்த வீதிகளில் பயணிக்கும் போது விபத்துக்களை தவிர்ப்பது கடினமானதாக இருப்பதாக குறிப்பிடுகின்றனர்.

மணலாற்று பாதையினூடாக மணலாறு பிரதேச செயலகம், நெடுங்கேணி , வவுனியா திருகோணமலை,புல்மோட்டை, தென்னமரவடி என பல இடங்களுக்கு சென்று சேர முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு


மணலாறு என்பதனை மக்கள் தங்கள் பிரயோகப் பழக்கத்தில் வெலிஓயா என பயன்படுத்தி வருவதோடு முல்லைத்தீவு(Mullaitivu) கொக்கிளாய் வீதியில் உள்ள மணலாற்றுச் சந்தியை வெலிஓயா சந்தி எனவும் பயன்படுத்தி வருவதையும் குறிப்பிடலாம்.

மணலாற்று வீதி

முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் இருந்து பிரிந்து மணலாறு நோக்கி பயணிக்க உதவும் வீதியே மணலாற்று வீதி என அழைக்கப்படும். இந்த பாதையின் முதல் பத்துக் கிலோமீற்றர் தூரத்திற்கு பெருங்காட்டினூடாக இந்த வீதி செல்கின்றது.

மாலைப் பொழுது மற்றும் இரவுப் பொழுதில் வீதிக்கு வரும் யானைகள் வீதிகளில் உள்ள வீதிக் குறியீட்டு காட்டிகளை உடைத்து விடுதல் அல்லது வளைத்து விட்டுச் செல்லுதல் அண்மைக்காலமாக தொடர்ந்தவாறு இருப்பதாக அந்த வீதியினை அதிகம் பயன்படுத்தி வரும் பயணிகள் குறிப்பிடுகின்றனர்.

வீதி விபத்துக்களுக்கு காரணமாகும் காட்டு யானைகளின் செயற்பாடு: தடுக்க கோரும் நெடுந்தூரப் பயணிகள் | Wild Elephants Cause Road Accidents

வளைவுகளை அதிகம் கொண்ட வீதியின் பகுதியாக முதல் பத்து கிலோமீற்றர் தூரம் இருப்பதால் பயணத்தின் வேகத்தினை மிகக்குறைந்தளவிலேயே பேண வேண்டி உள்ளதாக நெடுந்தூரப் பயணங்களில் ஈடுபட்டுவரும் பலரும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த வீதியில் வளைவுகளும் பாரியளவிலான ஏற்ற இறக்கங்களும் திடீர் திருப்பங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னால் வளைவு, முன்னால் பாலம், வீதியின் ஏற்றம், இறக்கம் என்பன போன்ற குறியீடுகள் காட்சிப்படுத்தப்படும் போது அவற்றை அவதானித்து தம்மை தயார்படுத்தி வாகனத்தை கையாளலாம் என மணலாற்று வீதியைப் பயன்படுத்தும் வாகனச் சாரதிகள் தங்கள் அனுபவத்தினைக் குறிப்பிடுகின்றனர்.

அவை சேதமாக்கப்பட்டிருப்பதால் அவ்வாறு அவதானித்து வாகனங்களைச் செலுத்துவது கடினமான காரியமாகும் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு விசேட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு விசேட அறிவிப்பு

மஞ்சள் பின்னிற குறியீட்டுக்காட்டிகள்

வீதிச் சமிக்ஞை குறியீட்டு காட்டிகளில் பின்னிறம் மஞ்சள் கொண்ட காட்டிகளை யானைகள் அதிகளவில் சேதமாக்கியிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.

வீதி விபத்துக்களுக்கு காரணமாகும் காட்டு யானைகளின் செயற்பாடு: தடுக்க கோரும் நெடுந்தூரப் பயணிகள் | Wild Elephants Cause Road Accidents

முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதான வீதியில் நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன் யானைகள் வீதியைக் கடக்கும் போது அப்பகுதியில் உள்ள மஞ்சள் பின்னிறத்தினைக் கொண்ட வீதிக்காட்டிகளை சாய்த்து வளைத்து முறித்து விட்டுச் சென்றிருந்தன என்பதும் நோக்கத்தக்கது. 

வீதியபிவிருத்தியின் போது நடப்பட்டிருந்த வீதிக்குறியீட்டு காட்டிகள் பழுதடைந்து செல்லும் போது அவற்றை மாற்றி புதியவற்றை நாட்டி வைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாது இருப்பதையும் அவதானிக்கலாம்.

முகநூல் விளம்பரத்தினை நம்பி வேலைக்கு சென்ற இளம்யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி

முகநூல் விளம்பரத்தினை நம்பி வேலைக்கு சென்ற இளம்யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஆய்வுகள் தேவை

யானைகளால் சேதமாக்கப்படும் வீதி குறிகாட்டிகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட வேண்டும்.அப்படிச் செய்யும் போது அவை மீண்டும் யானைகளால் சேதமாக்கப்படும் போக்கு இருப்பதையும் கருத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும்.

வீதி விபத்துக்களுக்கு காரணமாகும் காட்டு யானைகளின் செயற்பாடு: தடுக்க கோரும் நெடுந்தூரப் பயணிகள் | Wild Elephants Cause Road Accidents

வெள்ளைப் பின்னனி காட்டிகளும் மஞ்சள் பின்னனி காட்டிகளும் வீதிகளின் அமைவைக் காட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்கலாம்.

என்னும் யானைகளால் அதிகளவில் மஞ்சள் பின்னனி கொண்ட வீதிக்குறியீட்டு காட்டிகள் வளைத்து உடைக்கப்பட்டிருப்பதனை மணலாற்று வீதியில் அவதானிக்க முடிகின்றது.

இதனடிப்படையில் இந்த தகவல் சார்ந்த தெளிவான ஆய்வொன்றின் முடிவின் அடிப்படையிலேயே சேதமான வீதிக் குறியீடுகளுக்குப் பதிலாக புதியனவற்றை நிலை நிறுத்த வேண்டும்.

அப்போது தான் அவை தொடர்ந்தும் யானைகளால் சேதமாவது தடுக்கப்படுப் படுவதோடு நீண்ட தொடர்ச்சியான பயன்பாட்டுக்கு உதவுபவையாக இருக்கும் என்பதும் இங்கே சுட்டிக் காட்டத்தக்கது.

முல்லைத்தீவில் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு

முல்லைத்தீவில் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு

விசமிகளின் செயலா

வீதிக் குறியீட்டு காட்டிகள் சேதமாகும் போதெல்லாம் விசமிகளின் செயலகத் தான் இருக்கும் என தாம் நினைத்ததாகவும் தொடர்ந்து அவதானித்ததன் மூலம் அது யானைகளால் சேதமாக்கப்படுவதாக அறிந்து கொண்டதாக எரிஞ்சகாடு விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வரும் சில விவசாயிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் மூலம் அறிய முடிந்ததும் இங்கே நோக்கத்தக்கது.

வீதி விபத்துக்களுக்கு காரணமாகும் காட்டு யானைகளின் செயற்பாடு: தடுக்க கோரும் நெடுந்தூரப் பயணிகள் | Wild Elephants Cause Road Accidents

சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய முயலும் போது சுற்றுலாப்பயணிகள் இலகுவாக பயணங்களை மேற்கொண்டு இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு பொருத்தமான பயண வழிகாட்டி குறியீடுகளை கொண்ட சிறந்த வீதிக் கட்டமைப்பை பேணுவது அவசியமானது என்பதும் நோக்கத்தக்கது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGallery
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US