துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த நிலையில் யானைக் குட்டி மீட்பு
திருகோணமலை(Trincomalee) கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆற்றுக்கு அண்மித்த பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் காட்டு யானைக் குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில், யானை குட்டி ஒன்று வீழ்ந்து கிடப்பதாக, கிராமவாசிகள் கந்தளாய் வனவிலங்கு அதிகாரிகளுக்கு வழங்கிய தகவலை அடுத்து, இந்த குட்டி யானை மீட்கப்பட்டுள்ளது.
காட்டு யானைக் குட்டி மீட்பு
இந்நிலையில், கந்தளாய் கால்நடை மருத்துவர் சமீர கலிங்கு ஆராச்சி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்றைய தினம்(23) காலை சம்பவ இடத்திற்குச் சென்று, குறித்த யானை குட்டிக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
சுமார் 3 வயதுடைய பெண் யானைக் குட்டியின் வயிறு மற்றும் தொடை பகுதிகளில் 6 குண்டுகள் பாய்ந்துள்ளதால் நடக்க முடியாத நிலையில் உள்ளதாக இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்தில் பெய்த மழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், யானைக்குட்டி அதன் தாயிடமிருந்து பிரிந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் சந்தேகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் News Lankasri
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam