திருகோணமலையில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் படுகாயம்
திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி அகஸ்தியஸ்தாபனம் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்
பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை சிவசம்பு (வயது 63) என்பவரே படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
இரவுநேர காவலுக்காக சென்றவருக்கு நேர்ந்த கதி
குறித்த நபர் சிகிச்சைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கங்குவேலி – படுகாட்டுப் பகுதியில் மேற்கொண்டுவரும் வயலுக்கு இரவுநேர காவலுக்காக சென்றிருந்தபோதே யானையின் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் மொறவெவ -கோமரங்கடவல பகுதிகளில் இதுவரை ஒரு
வருடத்திற்குள் ஆறு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
