12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசி தடையால் ஏற்பட்டுள்ள சர்ச்சை
இலங்கையில் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை தொடர்பாக அரசாங்கத்திற்குள் எந்த அதிகாரப்பூர்வ கலந்துரையாடல்களும் நடைபெறவில்லை என பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன தெரிவித்துள்ளார்.
ஒரு முடிவு எடுப்பதற்கு முன் குறிப்பிடத்தக்க விவாதங்கள் தேவைப்படும் என அவர் மேலும் கூறினார். “நாங்கள் இன்னும் எதையும் விவாதிக்கவில்லை. இது ஒரு கருத்து மட்டுமே.
கையடக்க தொலைபேசி
இதைச் செய்ய வேண்டுமானால், நீதி அமைச்சு போன்ற பிற அமைச்சுக்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். சில நாடுகள் ஏற்கனவே இதுபோன்ற நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளன.

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆலோசனை நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கையடக்க தொலைபேசிகளை வைத்திருப்பதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடுக்கும் தடையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் முன்பு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam