ஐ.நா உயர்ஸ்தானிகருக்கு சென்ற அரசின் போலி தகவல்களுடனான கடிதம் - விக்னேஸ்வரன் ஆதங்கம்
ஐ.நா உயர்ஸ்தானிகருக்கு, இலங்கை அரசாங்கத்தால் போலி தகவல்களுடன் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் ஆதங்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் அடங்கியுள்ளன.
இந்த நிலையில், உண்மையான நிலைமைகள் குறித்த தகவல்கள் அடங்கிய கடிதம் ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகருக்கு நேற்று அனுப்பப்பட்டுள்ளது.
போரின் இறுதி நாளில் 14000 பேர் மாத்திரமே இறந்தார்கள் என்பது உள்ளிட்ட உண்மைக்கு புறம்பான பல கருத்துகள் அரசாங்கத்தின் அறிக்கையில் உள்ளடங்கி இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam