கஜேந்திரகுமாருக்கு ஆதரவு தெரிவிக்கும் அர்ச்சுனா - தையிட்டி போராட்டத்திற்கு செல்லாதது ஏன்..!
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு ஆதரவு தெரிவிக்கும் அர்ச்சுனா இராமநாதன், அவர்கள் செய்யும் தையிட்டி போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று வட மாகாண கடற்றொழிலாளர் பிரதிநிதி நா. வர்ணகுலசிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் அவர் நேற்றையதினம்(6) நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“தனக்கு வாக்களிக்காவிட்டாலும், கஜேந்திர குமார் பொன்னம்பலத்திற்கு வாக்களியுங்கள் அவர்தான் தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள நேர்த்தியான உறுப்பினர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
கஜேந்திர குமார் பொன்னம்பலமும் அர்ச்சுனாவும் ஒன்று சேர்ந்து வாக்கு கேட்டாலும் எங்களுக்கு பிரச்சினை இல்லை.
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்று சேரவேண்டும், எமது மக்களுக்காக இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.