புலிகள் ஆயுதம் ஏந்தியது ஏன்? பிரதமர் மஹிந்தவுக்கு சார்ள்ஸ் பதிலடி
வடக்கு - கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் இறைமையுடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் புலிகள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள் என்பதை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு தெளிவுப்படுத்த விரும்புகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழ் மக்களுக்கு எதிராக இன ரீதியாக, நிலம் சார்ந்த, கல்வி சார்ந்த, உயிர் சார்ந்த அழிவுகளை ஏற்படுத்தியதன் விளைவாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டியிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,