மணிவண்ணன் விடுதலையின் பின்னணியில் இருந்தவர்கள் யார்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
யாழ். மாநகர மேயர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டமையின் பிண்ணனியில் பலர் உள்ளனர் என யாழ்.மாவட்ட உறுப்பினரும்,சட்டத்தரணியுமான மு.றெமீடீயாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதல்வர் கைது செய்யப்படுவதற்கான முதல் நாள் நாடாளுமன்றத்தில் முதல்வரினால் உருவாக்கப்பட்ட குழு தொடர்பான விவாதத்தில் தமிழ் மக்கள் அள்ளி அள்ளி வாக்களித்த சஜித் அணியினர் கூக்குரலிட்டனர்.
இதன்போது சஜித் அணியினரின் கூக்குரலிற்கு ஆதரவாக கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பல கருத்துக்களை பகிரங்கமாக கூறினார்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ள்ஸ் நிர்மலநாதன் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறாத விடயங்களை கூட கூறினார்.
அதாவது ,ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினருடன் இணைந்து தான் முதல்வர் படை அணியை உருவாக்கியதாக பகிரங்கமாக அறிவித்தார்.
ஆனால் இதற்கு கூட்டமைப்பின் உறுப்பினர்களோ,தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் உறுப்பினர்களோ அல்லது விக்னேஸ்வரனுடைய கட்சியை சார்ந்தவர்களோ சார்ல்ஸ் நிர்மலநாதனின் கருத்து தொடர்பில் எதுவும் கூறாமல் மௌனம் காத்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த ராசியில் பிறந்தவங்க இறக்கும் வரை பணக்காரர்களாக இருப்பார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
