உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கை உட்பட உலகளவில் கோவிட் தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இலங்கையில் உள்ள உலக சுகாதார அமைப்பின் அலுவலகம் இன்று காலை இது தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளது.
அதில் டெல்டா மாறுபாடு காரணமாக தொற்றின் அதிகரிப்பு, சமூக இயக்கம் மற்றும் சமமற்ற தடுப்பூசி வழங்கல் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கடினமாக வெற்றி கொண்ட நன்மைகள் ஆபத்தில் உள்ளன என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
COVID19 cases are rising globally including in Sri Lanka. WHO cautions this is driven by the highly transmissible Delta variant, increased social mixing/mobility, inconsistent PHSM & inequitable vaccination. Hard-won gains are in jeopardy & health systems are being overwhelmed https://t.co/ZVjRIXxRh0
— WHO Sri Lanka (@WHOSriLanka) July 31, 2021
இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் - டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸஸ், கடந்த வாரம் மாத்திரம் 4 மில்லியன் கோவிட் தொற்றுகள் பதிவானதாக கூறியுள்ளார்.
இந்த தொற்றுக்களில் பெரும்பாலானவை தீவிரமாக பரவும் டெல்டா வகையால் ஏற்பட்டவை என்று அவர் தெரிவித்துள்ளார்.
வைரஸைத் தடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், அடுத்த 2 வாரங்களுக்குள் மொத்த தொற்றுக்களின் எண்ணிக்கை 200 மில்லியனைக் கடக்கும் என்று எதிர்பார்ப்பதாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
