போராட்டங்களைத் தூண்டியது யார் என்பது இரகசியமல்ல- பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம்
இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிரகத்துக்கு முன்னாள் நடத்தப்பட்ட போராட்டங்களைத் தூண்டியது யார் என்பது இரகசியமல்ல என்று, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக உள்ளூர்வாசிகள் குழு ஒன்று, கொழும்பில் நடத்திய போராட்டம் தொடர்பிலேயே பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம்
2025, ஏப்ரல் 30 மற்றும் மே 2, ஆகிய திகதிகளில் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் முன் நடந்த போராட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த கருத்தை வெளியிட்டுள்ள, உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர், அந்த அப்பாவி மக்களை போராட்டத்தில் பங்கேற்கத் தூண்டியது மற்றும் நிதியுதவி செய்தது யார் என்பது இரகசியமல்ல என்று கூறியுள்ளார்.
அவர்களில் பெரும்பாலோருக்கு அவர்கள் எங்கே வந்தார்கள், ஏன் அங்கே வந்தார்கள் என்பது கூடத் தெரியாது. இந்த நடவடிக்கைகளைத் திட்டமிட்டு பிளவுகளை உருவாக்கும் கூறுகள், சமூகத்தின் நல்லிணக்கத்தைப் பற்றியோ அல்லது விதிகள் மற்றும் உள்ளூர் சட்டங்களையோ மதிக்கவில்லை.
பாகிஸ்தான்- இலங்கை
இந்தப் போராட்டங்களைத் தூண்டியவர் யார் என்பது தெரிந்ததால், பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரகம் விரைவில் இதேபோன்ற போராட்டத்தை ஏற்பாடு செய்யுமா என்ற கேள்விக்கு பதிலளித்த பேச்சாளர், பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையேயும், இரு நாட்டு மக்களுக்கும் இடையேயும் அன்பு, மரியாதை மற்றும் புரிதலின் வலுவான பிணைப்பு இருப்பதாகக் கூறினார்.
எனவே, இலங்கையின் அமைதியான மற்றும் சகோதரத்துவ மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் பாகிஸ்தான் மேற்கொள்ளாது பிராந்தியத்தின் ஒட்டுமொத்த நிலைமை தொடர்பில், எந்தவொரு பொறுப்புள்ள நாட்டைப் போலவே பாகிஸ்தானும் ஏற்கனவே இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்த முன்வந்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவின் எந்தவொரு தவறான செயல்களுக்கும் தகுந்த பதிலடி கொடுக்க பாகிஸ்தானும் தயாராகவே உள்ளது என்று பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
