பொலிஸ் கூண்டில் இருந்த இளைஞன் மர்ம மரணம்! தென்னிலங்கையில் சம்பவம்
தென்னிலங்கையின் அம்பலாங்கொடை, கொஸ்கொடை பிரதேசத்தில் பொலிஸ் தடுப்புக் கூண்டில் இருந்த இளைஞன் ஒருவர் மர்மமாக உயிரிழந்துள்ளார்.
கொஸ்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் கடுமையாக போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகியிருந்த நிலையில், நேற்றையதினம்(01.05.2025) அவரது குடும்பத்தினரே பொலிஸாரிடம் குறித்த இளைஞரை ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இளைஞரை பொலிஸார் மூலம் புனர்வாழ்வுக்கு அனுப்புவதே குடும்பத்தினரின் நோக்கமாக இருந்துள்ளது.
விசாரணைகள்
எனினும், நேற்றிரவு கொஸ்கொடை பொலிஸ் நிலைய தடுப்புக் கூண்டில் இருந்த இளைஞன், திடீரென்று சுகவீனமுற்ற நிலையில் பலப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞன் இன்று உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் ஒப்படைத்த இளைஞன் மீது பொலிஸார் மேற்கொண்ட கடுமையான தாக்குதல் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 21 மணி நேரம் முன்

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
