கோட்டாபய எப்போது இலங்கை திரும்புவார்:வெளியாகியுள்ள தகவல்
சிங்கப்பூரில் தற்பொழுது தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த மாத இறுதியில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
சவுதியில் சில வாரங்கள் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி, ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு வர எதிர்பார்த்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலைதீவில் இருந்த சிங்கப்பூர் சென்ற கோட்டாபய

இலங்கையில் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக கோரி நடத்தப்பட்டு வந்த போராட்டங்கள் கடந்த 9 ஆம் திகதி அதிகரித்துடன் போராட்டகாரர்கள், ஜனாதிபதி மாளிகை , அலரி மாளிகை, ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமரின் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு அங்கு தங்கியிருந்தனர்.
அரசியல் நெருக்கடி நிலைமை அதிகரித்த சூழலில் கோட்டாபய ராஜபக்ச, விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் மாலைதீவு சென்று அங்கிருந்த சவுதி அரேபியாவுக்கு சொந்தமான விமானத்தில் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றதுடன் அங்கிருந்த பதவி விலகல் கடிதத்தையும் அனுப்பி வைத்தார்.
14 நாட்கள் மட்டுமே தங்கியிருக்க அனுமதி வழங்கிய சிங்கப்பூர்

சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 14 நாட்கள் பயண அனுமதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அறிவித்திருந்தது.
அத்துடன் அவருக்கு அரசியல் புகலிடம் எதுவும் வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியிருந்தார்.
சிங்கப்பூரில் தங்கியிருக்க வழங்கிய அனுமதி காலம் முடிவடையும் நிலையில், அவர் அங்கிருந்து சவுதி அரேபியாவுக்கு செல்ல உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam