இலங்கையில் சர்ச்சைகளையும் தாண்டி மாற்றத்தை ஏற்படுத்திய ரணில் - மக்களின் எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேறுமா...

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Food Crisis Sri Lanka Fuel Crisis
By Vethu Aug 05, 2022 07:43 AM GMT
Report

பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருந்த இலங்கை சற்று முன்னேற்றம் கண்டு வருவதாக பொருளியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த நாள் எப்படியிருக்கும் என்ற நிச்சயமற்ற நிலையில் இருந்த நாட்டு மக்கள், தற்போது நிம்மதியாக மூச்சு விட வாய்ப்பு கிடைத்துள்ளது.

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சமகால நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.

இலங்கையில் சர்ச்சைகளையும் தாண்டி மாற்றத்தை ஏற்படுத்திய ரணில் - மக்களின் எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேறுமா... | When Was Ranil Wickramasinghe Born

அரசியல் மாற்றம்

ஜனாதிபதியாக ரணில் பதவியேற்றமை மற்றும் அதுசார்ந்த அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தாலும், மக்கள் சார்ந்த விடயங்கள் சாதக நிலைப்பாடுகளை தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவானார் ரணில்! 

சில வாரங்களுக்கு முன்னர் எரிபொருள், எரிவாயு, அத்தியாசிய உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. அதனை பெற்றுக்கொள்ளவும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை காணப்பட்டது.

சில பகுதிகளில் எரிவாயுவை பெற மாதக்கணக்கிலும், எரிபொருளை பெற கிழமைக்கணக்கில் காத்திருந்தத சம்பவங்களும் பாதிவாகி இருந்தன. இதன்போது மரணங்களும் பதிவாகியிருந்தன. 

எனினும் தற்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமகாலத்தில் எரிவாயுவிற்கான நெருக்கடி நிலைமை தீர்க்கப்பட்டு வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கையில் சர்ச்சைகளையும் தாண்டி மாற்றத்தை ஏற்படுத்திய ரணில் - மக்களின் எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேறுமா... | When Was Ranil Wickramasinghe Born

பொருளாதார நெருக்கடி

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் - சடுதியாக குறைந்த விலைகள் 

முன்னர் போன்று தேவையான நேரத்தில் எரிவாயுவை பெற்றுக்கொள்ள கூடிய நிலைமை வந்துள்ளது. இனிவரும் காலங்களில் எரிவாயுவிற்கான வரிசைகள் இருக்காது என லிற்றோ நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. பல மாதங்களுக்கு தேவையான எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் எரிபொருளை பெற இரவு பகலாக காத்திருந்த மக்கள், அரசாங்கம் நடைமுறைப்படுத்திய புதிய நடைமுறையின் கீழ் அதனை இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகளில் எரிபொருளுக்கான நீண்ட வரிசை காணாமல் போயுள்ளது. தேசிய எரிபொருள் திட்டமான QR நடைமுறையின் கீழ் இலகுவாக எரிபொருள் பெற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது. எனினும் நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் வழங்குவதால் சில தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சர்ச்சைகளையும் தாண்டி மாற்றத்தை ஏற்படுத்திய ரணில் - மக்களின் எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேறுமா... | When Was Ranil Wickramasinghe Born

சாதகமான நிலைப்பாடு

நீண்டதூர பேருந்து சேவையில் ஈடுபடுவோர் தமக்கான எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். எனினும் இது குறித்து சாதகமான முறையில் பரிசீலிப்பதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக விலையேற்றத்திற்கு மட்டுமே முகங்கொடுத்து வந்த நாட்டு மக்கள், இன்று விலை குறைப்பின் நலன்களை அனுபவிக்க தொடங்கியுள்ளனர்.

எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. எரிபொருளின் விலை குறைப்பு சிறியளவில் இருந்தாலும், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பெருமளவில் குறைந்துள்ளமை மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது. இனிவரும் காலங்களில் மேலும் பல மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் சர்ச்சைகளையும் தாண்டி மாற்றத்தை ஏற்படுத்திய ரணில் - மக்களின் எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேறுமா... | When Was Ranil Wickramasinghe Born

சர்வகட்சி அரசாங்கம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசி்யல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீவிர முயற்சி எடுத்து வருவதாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இதற்கு மக்கள் விடுதலை முன்னணி தவிர்ந்த ஏனைய அரசியல்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் அடுத்து வரும் வாரங்களில் சர்வகட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படவுள்ளது. இதன்மூலம் வலுவான அரசாங்கம் ஒன்று நிறுவப்படும்.

அது சாத்தியமாகும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடுகளில் முன்னேற்றகரமான நிலை ஏற்பட்டு, 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக கிடைக்கும்.

இலங்கையில் சர்ச்சைகளையும் தாண்டி மாற்றத்தை ஏற்படுத்திய ரணில் - மக்களின் எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேறுமா... | When Was Ranil Wickramasinghe Born

சர்வதேச உதவிகள்

சர்வதேச நாணய நிதியம் சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினால், உலக வங்கி உட்பட பல சர்வதேச நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.

2024ஆம் ஆண்டில் இலங்கை வழமையான நிலைக்கு திரும்பும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US