கருணாவால் இடம்பெற்ற கொடூரங்கள்! இந்திய முகவர்கள் இலங்கையில் (Video)
துரோகிகள் எல்லாம் தியாகிகளாகவும், தியாகிகள் எல்லாம் துரோகிகள் மற்றும் பைத்தியக்காரர்களாக சித்தரிக்கப்படுகின்ற கொடிய காலம் தான் இது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கூட்டமைப்பின் தலைவர்கள் இந்தியாவினுடைய முகவர்கள், பல வருடங்களாக இந்தியாவால் வளர்க்கப்பட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) கொடூரமாக செய்த பல கொலைகள் இருக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எம்மோடு அவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் அடங்கிய முழு செவ்வி இதோ,