இலங்கையில் தீவிரம் அடையும் புற்றுநோய் - பல்லாயிரக்கணக்கானோர் மரணம்
உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 19.3 மில்லியன் புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டில் இலங்கையில் 38 ஆயிரத்து 229 புதிய புற்றுநோயாளிகள் இனங்காணப்பட்டனர். 16 ஆயிரத்து 690 நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச புற்றுநோய் தினம் நாளையதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு கொழும்பில்
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த
அவர் இதனைக் குறிப்பிட்டார்.