கிண்ணியா விவகாரம்! நடந்தது என்ன? அம்பலமான உண்மை கதை (Video)
இலங்கைத் தீவில் இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் குறைவில்லாத தமிழர் தாயகப் பகுதிகளில் புதிதாக ஒரு துன்பியல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை - கிண்ணியா பகுதியில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிலரை ஏற்றிக் கொண்டு பயணித்த படகு கவிழ்ந்ததில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் முழு இலங்கையரையும் சோகத்தில் ஆழ்த்தியதோடு, இலங்கை அரசியல் பரப்பிலும் பேசுபொருளாக மாறியது.
பல்வேறு கனவுகளுடன் பாடசாலைக்கு சென்ற மாணவர்களுடன், தொழிலுக்காவும், தேவை நிமித்தமும் அந்த படகில் பயணித்தவர்களில் ஒரு சிலரின் பயணம் அதன் எல்லையை தொடாமலேயே முடிவுறுத்தப்பட்டது.
அந்த துயரச் சம்பவம் குறித்து விரிவான தகவல்களுடன் வருகின்றது எமது விசேட காணொளி தொகுப்பு,