திசைகாட்டியின் வெற்றி தொடர்பில் வஜிர வெளியிட்ட தகவல்
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றி குறித்து பெரு மகிழ்ச்சி அடைவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுத் தேர்தல் முடிவுகள்
கடந்த காலங்களில் ஆட்சி செய்த எந்தவெரு அரசாங்கத்தினாலும் வெற்றி கொள்ள முடியாத வடக்கு கிழக்கு வாழ் மக்களின் வாக்குகளையும் இந்த அரசாங்கம் வென்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் என்ற ரீதியில் தேசிய மக்கள் சக்தி அடைந்த வெற்றி குறித்து மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகள் தொடர்பிலேயே அவர் ஊடகங்களிடம் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
