வென்தேசிவத்த சுத்தா பொலிஸாரால் கைது!
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய “வென்தேசிவத்த சுத்தா” என்பவர் துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று களுத்துறை(Kalutara) பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், களுத்துறை, வென்தேசிவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து மேலும் இரண்டு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசாரணை
சந்தேகநபர் களுத்துறை, நாகொடை, பயாகலை மற்றும் வென்தேசிவத்த ஆகிய பிரதேசங்களில் பல்வேறு நபர்களிடம் துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதங்களைக் காண்பித்து அவர்களை அச்சுறுத்தித் தாக்கியுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சந்தேகநபர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பயாகலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த நபர் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
