ஆபத்தான பகுதியாக மாறியுள்ள வெள்ளவத்தை! - தனிமைப்படுத்தப்பட்ட பெரகும்பா குடியிருப்பு
கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் பெருமாளவான கோவிட் தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி ஸ்ரீபிரதாபன் இதனை தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்படி, வெள்ளவத்தை மற்றும் பம்பலபிட்டி சுகாதார பிரிவில் நாளாந்தம் நடத்தப்படும் கோவிட் பரிசோதனைகளில் சுமார் 30 தொடக்கம் 40 வீதமான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, வெள்ளவத்தை பகுதியில் பெரகும்பா தொடர்மாடி குடியிருப்பு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பெரகும்பா தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் சுமார் 100ற்கும் அதிகமானோருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பெரகும்பா பகுதியில் மாத்திரமே கொத்தணி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், எனினும், வெள்ளவத்தை பகுதியில் வேறு எந்தவொரு இடத்திலும் இவ்வாறான கொத்தணி உருவாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 18 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri