அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை அறிவிப்பு!
அடுத்த 36 மணி நேரத்திற்கு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
இடியுடன் கூடிய மழை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கிழக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சிறைச்சாலைக்குள் நடைபெற்ற மனிதாபிமானமற்ற கொடூரம்! காணாமல்போன இரு T-56 துப்பாக்கிகள் : வெளிவந்துள்ள உண்மைக் கதை...
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்! போதை மாத்திரைகளால் சுயநினைவின்றி இருந்த கைதிகள் - வெளியாகும் அதிர்ச்சி தகவல்
நீர்கொழும்பு சிறையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பெரும் பதற்றம் - அவசர விசாரணைக்காக விரையும் முக்கிய அதிகாரிகள்
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan