பிரதமரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு
'புத்த ரஷ்மி வெசாக் விழா 2025' தொடர்பில் பிரதமரின் ஊடக பிரிவு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
மே 13 முதல் ஹுணுபிட்டிய கங்காராமய விகாரை, அலரி மாளிகை அதிகாரப்பூர்வ இல்லம், பெரஹெர மாவத்தை மற்றும் பேர ஏரிப் பகுதிக்கு அருகில் நடைபெற உள்ளது என்று பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெசாக் விழா
ஹுணுபிட்டிய கங்காராமய விகாரையும் பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த "புத்த ரஷ்மி வெசாக் விழா" தொடர்பான கலந்துரையாடல் நேற்று (12) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடல் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முப்படைகள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக இளங்கலை மாணவர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் சிறைச்சாலை கைதிகள் ஏற்பாடு செய்யும் வெசாக் அலங்காரங்கள், வெசாக் பந்தல்கள் மற்றும் விளக்குகள் கண்காட்சிகள் இடம்பெறும்.
முன்னாள் இராணுவ வீரரிடம் பெண் மருத்துவரின் மோசமான புகைப்படங்கள்: 72 மணித்தியாலங்களில் நடந்தது என்ன..!
மேலும், புத்த ரஷ்மி வெசாக் பண்டிகைக்கு ஏற்ப, அரச பாடசாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் மத நிகழ்ச்சிகளை நடத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri