பிரதமரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு
'புத்த ரஷ்மி வெசாக் விழா 2025' தொடர்பில் பிரதமரின் ஊடக பிரிவு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
மே 13 முதல் ஹுணுபிட்டிய கங்காராமய விகாரை, அலரி மாளிகை அதிகாரப்பூர்வ இல்லம், பெரஹெர மாவத்தை மற்றும் பேர ஏரிப் பகுதிக்கு அருகில் நடைபெற உள்ளது என்று பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெசாக் விழா
ஹுணுபிட்டிய கங்காராமய விகாரையும் பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த "புத்த ரஷ்மி வெசாக் விழா" தொடர்பான கலந்துரையாடல் நேற்று (12) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடல் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முப்படைகள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக இளங்கலை மாணவர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் சிறைச்சாலை கைதிகள் ஏற்பாடு செய்யும் வெசாக் அலங்காரங்கள், வெசாக் பந்தல்கள் மற்றும் விளக்குகள் கண்காட்சிகள் இடம்பெறும்.
முன்னாள் இராணுவ வீரரிடம் பெண் மருத்துவரின் மோசமான புகைப்படங்கள்: 72 மணித்தியாலங்களில் நடந்தது என்ன..!
மேலும், புத்த ரஷ்மி வெசாக் பண்டிகைக்கு ஏற்ப, அரச பாடசாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களில் மத நிகழ்ச்சிகளை நடத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam