இலங்கையின் வானிலையில் ஏற்படும் மாற்றம்
இலங்கையின் பல பகுதிகளில் நாளை (26.01.2023) மற்றும் நாளை மறு தினம் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளிமண்டல திணைக்களத்தின் அறிவிப்பில் மேலும், வங்காள விரிகுடாவில் நிலவும் காலநிலை காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் வியாழன் (26) மற்றும் வெள்ளிக்கிழமை (27) பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை 28 மற்றும் 29ஆம் திகதிகளில் மழை குறைவடைவதுடன், ஜனவரி 30 மற்றும் 31ஆம் திகளில் மழை காலநிலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.
பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri