தொடரும் சீரற்ற காலநிலை: இலங்கையில் மக்களுக்கு எச்சரிக்கையுடன் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறுகளை அண்டியுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆறுகளின் நீர்மட்டம்
தொடர் மழை காரணமாக ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன், சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அனர்த்தங்களும் பதிவாகியுள்ளளன.
இதன்காரணமாக ஆறுகளை அண்டியுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஐ.நாவில் இடம்பிடித்த நீதிபதி இளஞ்செழியன்: பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம்(Video)

இதேவேளை நாட்டிலுள்ள 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை
கொழும்பு, கண்டி, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, மாத்தறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 4.30 வரையில் இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri