நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று(6.4.2026) பிற்பகலுக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
எச்சரிக்கை
இதேவேளை, நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகல மாவட்டத்திலும் மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக்குறியீடு "எச்சரிக்கை" நிலையை எட்டும் என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கையில் மே அல்லது ஜூன் மாதங்களில் இயல்பான மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வுத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் உயர் வெப்பநிலை எச்சரிக்கை நிலை..! வெளியில் செல்வதில் அவதானம் - மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்