எதிர்க்கட்சியை பலவீனப்படுத்த முயற்சி: நளின் பண்டார
எதிரணியைப் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே கட்சி தாவல் கதை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அரசுடன் இணையமாட்டார்கள் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அறிவிப்பு விடுத்துள்ளது
ஐக்கிய மக்கள் சக்தியினர் உட்பட எதிரணியில் உள்ள 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் இணையவுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையிலேயே அவற்றை
நிராகரிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி மேற்கண்டவாறு அறிவிப்பு
விடுத்துள்ளது.