வடக்கு கிழக்கை பிரிக்கும் பிரதான சூத்திரதாரி மக்கள் விடுதலை முன்னணியினரே: வியாழேந்திரன் தகவல் (Photos)
வடக்கு கிழக்கை பிரிப்பதில் மிக முக்கியமான சூத்திரதாரியாக மக்கள் விடுதலை முன்னணியினர் செயற்படுவதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் விடுதலை முன்னணி
மேலும் வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் வடகிழக்கு இணைக்கப்பட்டால் தான் கிழக்கின் இருப்பை பாதுகாக்க முடியும். இணைந்த வட கிழக்கில் தான் தமிழர்களின் இருப்பும் பாதுகாக்கப்படும்.
கிழக்கு மாகாணத்தில் பின்னால் குத்தும் நல்லிணக்கத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். நல்லிணக்க அரசியல் என்பது தமிழர்களின் இருப்பை அழிக்கின்ற அல்லது அழிக்க நினைக்கின்ற ஒன்றாகும். இந்த அரசியலுக்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதில் ஆயிரம் வீதம் உறுதியாக இருப்பவர்கள் நாங்கள்.வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று 1987 ஆம் ஆண்டு இந்தியா வடகிழக்கு பிரச்சினைக்கு ஒரு தீர்வை கொண்டு வந்தது.
இதற்கமைய வடகிழக்கு இணைப்பு சம்பந்தமான ஒப்பந்தம் வந்த பொழுது இணைந்த வடகிழக்கு இருந்த போது அதன் பின் இந்த வடகிழக்கு பிரிக்கப்பட்டது.இந்த வடகிழக்கை பிரித்ததிலே மிக முக்கியமான சூத்திரதாரியாக இருந்த கட்சி மக்கள் விடுதலை முன்னணி கட்சியாகும்.
வடக்கு கிழக்கு இணைப்பு
இன்று காலையில் ஒரு செய்தியை பார்த்தேன், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக எதிர்ப்பதாக கட்சியின் உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். இதன்போது அவர் எமது நிலைப்பாடும் சம்பந்தனின் நிலைப்பாடும் இதுவாகவே இருக்கின்றதாக குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு மக்களுக்கு விருப்பம் இல்லாத அரசியல் தீர்வு எமக்கு வேண்டாம் என்று சம்பந்தன் தெரிவித்ததற்கு அமைவாக நாங்களும் அதை எதிர்க்கின்றோம் என்று சுனில் ஹந்துன் நெத்தி இதன்போது தெரிவித்துள்ளார்.
கிழக்கில் எங்களது அரசியல் நிலைப்பாடு தமிழர்களின் நிலவள பொருளாதார இருப்பை தமிழர்களோடு இருந்து கொண்டு முதுகில் குத்துகின்ற இந்த நல்லிணக்க அரசியலுக்கு எமது கழகம் ஒருபோதும் ஒத்துக் கொள்ளாது.
ஆகவே வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும், வடகிழக்கு இணைக்கப்பட்டால் தான் கிழக்கின் இருப்பை பாதுகாக்க முடியும்.இணைந்த வட கிழக்கில் தான் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படும். இணையாத வடகிழக்கில் காணி பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால் வடமாகாணம் ஓரளவு தப்பி பிழைக்கலாம்! கிழக்கு தப்பி பிழைக்காது.
காணி பொலிஸ் அதிகாரங்கள்
காணி பொலிஸ் அதிகாரம் இல்லாமலே கிழக்கு மாகாண ஆளுநருடைய சில நடவடிக்கைகள் ஏற்கத்தகாத சில திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு துணைபோகின்ற தன்மை. சில முஸ்லிம் இனவாத அரசியல்வாதிகள் தமிழர்களுடைய நில வளத்தை சூறையாடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை இணைந்த வடகிழக்கு இல்லாமல் தனியாக கிழக்கு மாகாண சபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் உங்களது நிலைமை என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். நாங்கள் உறுதியாக சொல்லுகின்றோம்.
வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும்.இணைந்த வடகிழக்குக்கு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய சீர் திருத்தத்துடன் கூடிய 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இணைந்த வடகிழக்கில் தான் கிழக்கை பாதுகாக்க முடியும், கிழக்கை பாதுகாத்தால் தான் வடகிழக்கை இணைக்க முடியும் என்று கூற விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
