ஈழத் தமிழருக்காக சட்டப் போராட்டங்கள் மூலம் நீதியைக் கோருவோம் : நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

Sri Lankan Tamils Tamils
By DiasA Jun 25, 2024 08:02 AM GMT
Report

ஈழத் தமிழர்களின் சார்பில் தொடர்ந்தும் சட்டப் போராட்டங்கள் மூலமும் நீதியைக் கோருவோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட சட்ட ரீதியிலான நடவடிக்கையை அடுத்து தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பொன்றாக தடை செய்தமை ஏற்றுக் கொள்ளத்தக்கது என தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேன்முறையீட்டு ஆணையகம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

இலங்கை ரூபாவிற்கு நிகராக பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி

இலங்கை ரூபாவிற்கு நிகராக பதிவாகியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி

சட்ட ரீதியிலான நடவடிக்கை

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆணையகத்தின் தீர்ப்பு தொடர்பாக தமது அடுத்த நகர்வை எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கும். தமிழீழ விடுதலைப் புலிகளை ஐக்கிய இராச்சியம் தடைசெய்தமைக்கெதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட இரண்டாவது சட்ட ரீதியிலான நடவடிக்கை இந்த வழக்காகும்.

நாடுகடந்த தமிழிழீழ அரசாங்கத்தால் முதலாவதாக கொண்டு வரப்ட்ட சட்ட நடவடிக்கையின் தீர்ப்பில்இ தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக எடுக்கப்பட்டமுறைமையில் தவறு இருந்ததாக கூறிய மேன்முறையீட்டு ஆணையகம் இந்த தடையை ஐக்கிய இராச்சிய உள்துறைஅமைச்சு மீள் பரிசீலனை செய்யுமாறு தீர்ப்பளித்திருந்தது.

ஈழத் தமிழருக்காக சட்டப் போராட்டங்கள் மூலம் நீதியைக் கோருவோம் : நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் | We Will Demand Justice For Eelam Tamils

உள்துறை அமைச்சு தடையை மீளவும் தொடர்ந்தது. இவ்வழக்கானது அம்முடிவிற்கு எதிராக மேற்கொண்ட சட்டநடவடிக்கை ஆகும். ஆணைக் குழுவின் தலைவர் இவ் வழக்கானது நெருங்கியதென்றும் சமநிலையாக இருந்ததென்றும் எனத் தெரிவித்த போதும் உள்துறை அமைச்சின் முடிவை ஏற்றுக் கொள்வதாக ஆணையகம் தீர்ப்பளித்துள்ளது.

உள்துறை அமைச்சின் தீர்மானத்துக்கெதிரான சட்டரீதியிலான நடவடிக்கையானது தகுதி அடிப்படையானதொன்றல்ல என ஆணைக்குழு மீண்டும் குறிப்பிட்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்து தடை செய்வது சரியானதா என ஆணைக்குவால் கூற முடியாது. ஆயினும் அம் முடிவு தொடர்பாக உள்துறை அமைச்சால் எடுக்கப்பட்ட முறைமையில் எந்தத் தவறும் இல்லை என உறுதிப்படுத்த முடியும் என தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு

கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு

இலங்கை அரசாங்க இணையத்தளங்கள்

தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் புலனாய்வு உறுப்பினர் ஒருவரால் கிளிநொச்சியில் 2020ஆம் ஆண்டு ஜூலை நான்காம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி பேருந்து ஒன்றில் கிளைமோர் கண்ணிவெடியை பொதியில் வைத்து கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட செய்தி இலங்கை அரசாங்க இணையத்தளங்களின் மீது தமிழீழ இணையப் படையால் மே 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல்களின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள்பயங்கரவாதத்திற்கு தயாராகின்றார்கள் என்ற நிலைப்பட்டைஐக்கிய இராச்சியத்தின் உள்துறை அமைச்சு எடுத்திருந்தது.

இலங்கை செய்திகள் இலங்கை நீதிமன்றங்களின் முடிவுகள் நம்பத் தகுந்தது அல்ல என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிட்டிருந்தது. எனினும் அந்த ஆவணங்களை விலக்குவதற்கு தேவையான போதுமான சட்டரீதியிலான குறைபாட்டை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கவில்லை என ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.

ஈழத் தமிழருக்காக சட்டப் போராட்டங்கள் மூலம் நீதியைக் கோருவோம் : நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் | We Will Demand Justice For Eelam Tamils

ஐக்கிய இராச்சிய உள்துறை அமைச்சிற்கு வழங்கப்பட்ட தகவல் தவறானது எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் அவற்றில் ஆறு நாடுகளில் (சிறீலங்கா இந்தியாமலேஷியா ஐக்கிய இராச்சியம் ஐக்கியஅமெரிக்கா கனடா) மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளனர் என்பதை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோடிட்டுக்காட்டியிருந்தது.

மேலும் 27 நாடுகள் (ஐரோப்பிய ஒன்றியத்தின் 26 நாடுகள்) தங்களது பொருளாதாரத் தடைப் பட்டியலில் மட்டுமே தமிழீழவிடுதலைப் புலிகளை உள்ளடக்கியுள்ளன என்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக் காட்டி இருந்தது.

ஜனாதிபதியுடன் இணையப்போகும் சஜித் அணியின் முக்கிய அரசியல்வாதிகள்

ஜனாதிபதியுடன் இணையப்போகும் சஜித் அணியின் முக்கிய அரசியல்வாதிகள்

வெளிநாட்டு பொதுநலவாய அபிவிருத்தி

உள்துறை அமைச்சால் அத் தவறுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள தென்பதை ஏற்றுக் கொண்ட ஆணையகம் அந்தத் தவறுகள் உள்துறைஅமைச்சின் தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை அல்ல எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்தோ-பசுபிக்கை நோக்கி நகரும் ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகாரக் கொள்கை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது இந்தியா இலங்கையுடனான ஐக்கிய இராச்சியத்தின் உறவுகளை பாதிக்கும் என்ற வெளிநாட்டு பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் ஆலோசனையை உலகளாவியரீதியில் பயங்கரவாதக் குழுக்களிற்கெதிரான ஒத்துழைப்புக்களை பலப்படுத்தும் பின்னணியில் பார்க்கவேண்டும் என ஆணையகம் தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தனித் தமிழ் நாடொன்றைக் கோருபவர்கள் ஐக்கிய இராச்சியத்தில் தமது அரசியலை முன்னெடுத்தலிலும் தமிழீழ இலச்சினையை வெளிப்படுத்துவதிலும் தமிழீழவிடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்வாதிட்டது.

பொலிஸாரின் தவறான புரிதல்கள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிக்கும் தமிழீழ தேசியக்கொடிக்கு மிடையேயுள்ள வேறு பாட்டை அங்கீகரித்த ஆணையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் நுட்பமான வேறு பாடுகளை புரிந்து கொள்ள மாட்டார்களெனவும் ஏற்றுக்கொண்டுள்ளது.

பொலிஸாருக்கும், சமூகங்களுக்கும் இடயேயான உரையாடல்கள் எதிர்காலத்தில் பொலிஸாரின் தவறான புரிதல்களைக் குறைப்பதற்கு வழிவகுக்கும் என ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.

ஈழத் தமிழருக்காக சட்டப் போராட்டங்கள் மூலம் நீதியைக் கோருவோம் : நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் | We Will Demand Justice For Eelam Tamils

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் போல் வடகிழக்கு இலங்கையில் தமிழ் நாடொன்றை அமைக்கும் சிந்தனையைக் கொண்டிருக்கின்ற போதும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக் கெதிராக உள்துறை அமைச்சு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆணையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது அதன் சட்டத்தரணி பீற்றர் ஹெய்ன்ஸ் ராஜ சட்டத்தரணி சாந்தி சிவகுமரன் சொலிசிட்டர் போல் ஹெரொன் (பொதுநல சட்ட நிறுவகம்) ஆகியோருக்கு அவர்களது மிகச் சிறப்பான சட்டப் பிரதிநிதித்துவத்திற்கு கடமைப்பட்டுள்ளது.

சர்வதேச ஒழுங்கு மற்றும் பொறுப்புக் கூறலில் சட்டத்தின் முக்கியத்துவம் கருதி நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது ஈழத் தமிழர்களின் சார்பில் தொடர்ந்தும் சட்டப்போராட்டங்கள் மூலமும் நீதியைக் கோரி நிற்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

[UTESZQG ]

தென்கொரிய தீ அனர்த்தத்தில் பலர் பலி - இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்

தென்கொரிய தீ அனர்த்தத்தில் பலர் பலி - இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
மரண அறிவித்தல்

தம்பசிட்டி, Morden, United Kingdom

29 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Melbourne, Australia, Blackburn, Australia

06 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, உடுப்பிட்டி, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US