வத்தளை குடும்பஸ்தர் நுவரெலியாவில் வெட்டிக்கொலை: வெள்ளவத்தை பெண் படுகாயம்
நுவரெலியாவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீப்பிலிமான பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று(09.09.2023) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
குறித்த சம்பவத்தில் வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய எஸ்.சுந்தரலிங்கம் என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை கொழும்பு - வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் காணித் தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார் எனவும், அவரைக் கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பமாகியுள்ளது எனவும் குறிப்பிட்டனர்.
மேலும் நுவரெலியா மாவட்ட நீதிவான் சம்பவ இடத்துக்கு வருகை தந்து, விசாரணைகளை மேற்கொண்ட பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டள்ளதாக நுவரெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 15 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan