நீர்க்கட்டண அதிகரிப்பு! இன்று வர்த்தமானி வெளியாகும்
நீர் கட்டண அதிகரிப்பு குறித்து புதிய அறிவித்தல் வெளியானது.
இதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி வெளியானது
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறுவோருக்கான வாய்ப்பு
எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.
அதற்கமைய, வீடுகளின் நீர் கட்டணம் 70 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், குறைந்த வருமானம் பெறுவோரின் வீடுகள் மற்றும் அரச பாடசாலைகளில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

பல்லவன்-பாண்டியன் கதறி அழுது நிலாவிடம் வைக்கும் வேண்டுகோள், அவரின் முடிவு என்ன?.. அய்யனார் துணை சீரியல் Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
