நீர்க்கட்டண அதிகரிப்பு! இன்று வர்த்தமானி வெளியாகும்
நீர் கட்டண அதிகரிப்பு குறித்து புதிய அறிவித்தல் வெளியானது.
இதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி வெளியானது

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறுவோருக்கான வாய்ப்பு

எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.
அதற்கமைய, வீடுகளின் நீர் கட்டணம் 70 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், குறைந்த வருமானம் பெறுவோரின் வீடுகள் மற்றும் அரச பாடசாலைகளில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri