நீர்க்கட்டண அதிகரிப்பு! இன்று வர்த்தமானி வெளியாகும்
நீர் கட்டண அதிகரிப்பு குறித்து புதிய அறிவித்தல் வெளியானது.
இதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானி வெளியானது

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறுவோருக்கான வாய்ப்பு

எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.
அதற்கமைய, வீடுகளின் நீர் கட்டணம் 70 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், குறைந்த வருமானம் பெறுவோரின் வீடுகள் மற்றும் அரச பாடசாலைகளில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam