காங்கேசன்துறை பொலிஸ் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை பகுதியில் உள்ள பொலிஸ் விடுதியில் குடிநீர் சுத்திகரிப்பு தொகுதி அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் 20 இலட்சம் ரூபா நிதிப்பங்களிப்பில், வடமாகாண கடற்படை கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் அருண தென்னக்கோனின் தலைமையிலான கடற்படையினரின் தொழில்நுட்ப மற்றும் சரீர ஒத்துழைப்புடன் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரத்ன, வடமாகாண கடற்படை கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் அருண தென்னக்கோன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் மற்றும் கடற்படையினர் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
மேலும், நீண்டகாலமாக தீர்க்கப்படாது இருந்த குடிநீர் பிரச்சினைக்கு இதன் மூலம் தீர்வு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வடமாகாண கடற்படை கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் அருண தென்னக்கோன் இன்றுடன் தனது சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam