நாட்டில் வெகுவாக குறைவடையும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம்
மத்திய மலைநாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர் கொள்ளளவு 155 அடியாக இருந்ததுடன், 13ஆம் திகதி காலை வரை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 144.2 அடியாகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் அதிகபட்ச நீர் கொள்ளளவு 120 அடியாகக் காணப்பட்டதுடன், 13ஆம் திகதி காலை வரை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 85.9 அடியாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,கனியன் மின்நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பைப்லைனில் பராமரிப்புப் பணிகள் நடந்து வருவதால், கனியன் நீர் மின் நிலையத்தில் 75 மெகாவோட் மின் உற்பத்தி 5 நாட்களாகியும் இதுவரை உற்பத்தி செய்யப்படவில்லை எனவும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி... வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ Cineulagam
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam