நீர் வெட்டு குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் நாளை (27) நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சார சபைக்குச் சொந்தமான மின்சார அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் வெட்டு
அதன்படி, நாளை காலை 8.30 முதல் மாலை 5 மணிவரை 8 1/2 மணி நேரம் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க/சீதுவ நகர சபைப் பகுதிகள் மற்றும் களனி, பியகம, மஹர, தொம்பே, வத்தளை, ஜா-எல, கட்டான, மினுவங்கொட பிரதேச சபைப் பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதியின் ஒரு பகுதியிலும் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 1 மணி நேரம் முன்

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri
