யாழில் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட சிறுமி! பொலிஸாரிடம் சிக்கிய சந்தேகநபர்
யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் மின் கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் சிறுமி ஒருவர் மின் கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பவம்
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் மாலை அயலில் உள்ள வர்த்தக நிலையத்திற்குப் பொருட்கள் வாங்கச் சென்றபோது அங்குள்ள இனிப்பு வகையைக் களவாடியதாகக் கூறி அதன் உரிமையாளர் அந்த சிறுமியை மின் கம்பத்தில் கட்டி வைத்துத் தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதல்
இந்த தாக்குதல் காரணமாகக் காயமடைந்த சிறுமி அன்றிரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்கான அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணிப் பொலிஸார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்து சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 5 மணி நேரம் முன்

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan
