குளவி கொட்டுக்கு இலக்காகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதி (Video)
வவுனியா தெற்கு சிங்கள கோட்ட பிரிவுக்குட்பட்ட போகஸ்வெவ மகா வித்தியாலய பாடசாலையில் குளவி கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் இன்று நடைபெற்ற (17.10.2022) காலை பிரார்த்தனையின் போது காற்றின் காரணமாக மரம் ஒன்றில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மீது தாக்கியுள்ளது.
வைத்தியசாலையில் பலர் அனுமதி
இதனால் பாதிப்படைந்த 12 மாணவர்கள் பதவியா பிரதேச வைத்தியசாலையிலும் , 8 ஆசிரியர்கள் 12 மாணவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும், 3 மாணவர்கள் மடுகந்த பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 5 மாணவர்கள் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர் எனவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.











விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam
