திருகோணமலையில் குளவி கொட்டுக்கு இலக்கான சிறுவன்
திருகோணமலை - கோமரங்கடவல காட்டுப் பகுதிக்குள் வீரப் பழம் பறிக்கச் சென்ற சிறுவன் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கோமரங்கடவல - இந்திக்கட்டுவெவ பகுதியைச் சேர்ந்த சஸங்க நிரோஷன என்ற 13 வயது சிறுவனே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்கானதாக தெரியவருகின்றது.
குறித்த சிறுவன் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக
சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.