திடீரென யாழ்ப்பாணம் வந்தது வசந்த முதலிகே குழு: பல்வேறு தரப்புக்களுடன் இன்று சந்திப்பு
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்துக்குத் திடீரென வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் குழுவினர் நேற்று (11.03.2023) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் இன்று (12.03.2023) காலை 11 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.
இதற்கமைய காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தினரையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசேட சந்திப்புக்கள்
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்புரிமையை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெற்றிருக்காத நிலையிலும் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
கொழும்பில் தொடர்ச்சியாக அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கும் இந்த குழுவினர் திடீரென யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan