அவதானமாக செயற்படுமாறு இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
பண்டிகைக் காலத்தில் இடம்பெறும் மோசடி தொடர்பில் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்போது 'sale'என்ற பெயரில் காலாவதியான பொருட்களின் தகவல்கள் மாற்றப்பட்டு, பண்டிகைக் காலங்களில் விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
எனவே, இது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |