ஜனாதிபதி வேட்பாளர்களின் பதவிகளுக்கு காத்திருக்கும் சிக்கல்
எந்தவொரு வேட்பாளரும் தேர்தல் சட்டங்களை மீறினால், ஜனாதிபதி தேர்தலின் பின்னரும் அவர்களின் பதவிகளை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகள் மற்றும் தற்போதுள்ள அளவுகோல்களின் அடிப்படையில் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்.
அத்துடன் தேர்தல் சட்டத்தை மீறுவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்டங்கள்
எந்தவொரு வேட்பாளரும் தேர்தல் சட்டங்களை மீறினால், ஜனாதிபதி தேர்தலின் பின்னரும் அவர்களின் பதவிகளை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
