இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை : பணம் பறிபோகும் ஆபத்து
நாட்டின் அதிக வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில், அதிகளவான மக்கள் துரிதமாக பணம் சம்பாதிப்பதற்காக தவறான வழிகளை பயன்படுத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனிநபர்கள் தொடர்ந்து மோசடிகள் மற்றும் இணைய மோசடிகளுக்கு இரையாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசரகாலத் தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.
தற்போது Meta, Messenger என அழைக்கப்படும் Facebook போன்ற சமூக ஊடக தளங்களில், பிரமிட் திட்டங்களுக்கு மக்கள் பணத்தை வைப்பிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் மூத்த தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.
நான்கு இலக்க எண்
அண்மைய நாட்களாக நட்பு கோரிக்கைகளை அனுப்பும் மோசடி செய்பவர்கள் சில போட்டிகளுக்கு வாக்களிக்குமாறு தனிநபர்களை கேட்டு மோசடி செய்வதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நண்பர் கோரிக்கையை ஏற்கனவே அவர்களின் Facebook நண்பர் பட்டியலில் உள்ள ஒருவரின் தொடர்புள்ளவர் மூலம் அனுப்பப்படலாம்.
போட்டிக்கு வாக்களிக்க ஒரு குறியீடாக நான்கு இலக்க எண்ணை அந்த நபருக்கு திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுக்கலாம்.
நான்கு இலக்க குறியீட்டு எண் ஒரு முறை கடவுச்சொல் (OTP) ஆகும். இது கடவுச்சொற்களை மாற்றுவது போன்ற செயல்களுக்காக பேஸ்புக் நிறுவனத்தால் அனுப்பப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
கடவுச்சொல்
ஒரு முறை கடவுச்சொல்லை அனுப்பிய பிறகு, அசல் பேஸ்புக் உரிமையாளர் தனது கணக்கை இழப்பார் என தெரியவந்துள்ளது.
எனவே, OTP குறியீடுகளை யாருடனும் பகிர வேண்டாம் என இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் மூத்த தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் மூத்த தகவல் பாதுகாப்புப் பொறியாளர் கேட்டுக் கொண்டார்.
ஒரு தனிநபரின் தேசிய அடையாள அட்டை, இலங்கை கடவுச்சீட்டின் தகவல் பக்கம் மற்றும் ஓட்டுநர் உரிமங்களின் பிரதிகள், கையொப்பங்கள் உள்ளிட்டவற்றின் தெளிவான நகல்களை யாரிடமும் பகிர வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
[ நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
