வாக்குரிமையை மீறினால் சட்ட நடவடிக்கை! அரசாங்கத்திற்கு எதிரணி எச்சரிக்கை
தேர்தல் என்பது மக்களின் அடிப்படை உரிமையாகும், அதனைத் திட்டமிட்டுக் காலம் தாழ்த்துவது சட்டவிரோத செயற்பாடாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
எனவே, மக்களின் வாக்குரிமையை மீறும் வகையில் அரசாங்கம் செயற்படுமாயின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் சட்டவிரோதமாக செயற்பட்டால்..!
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், சட்டம் மற்றும் அரசமைப்புக்கமைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக அரசாங்கம் சட்டவிரோதமாகச் செயற்படுமானால் நாம் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்போம்.
அரசாங்கத்திற்கு சட்டவிரோதமாகச் செயற்பட முடியாதல்லவா? தேர்தல் என்பது மக்களின் அடிப்படை உரிமையாகும். அவ்வாறிருக்கையில் அதனைத் திட்டமிட்டுக் காலம் தாழ்த்துவது சட்டவிரோத செயற்பாடாகும்.
அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றத்தினுடையதாகும். அதற்கமைய நீதிமன்றம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் என்று நம்புகின்றோம்.
ஓரிரு வருடங்களில் நெருக்கடிகளுக்குத் தீர்வு
பொருளாதாரத்தைச் சீரழித்ததன் பின்னர் துரித தீர்வைக் காண முடியாது. ஓரிரு வருடங்களில் இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு கண்டு விட முடியும் என்று எண்ண வேண்டாம். அவ்வாறு துரித தீர்வு எதுவும் இல்லை.
நாட்டில் தற்போது ரூபாவும் இல்லை, டொலரும் இல்லை. இன்னும் நீண்ட காலத்துக்கு எவ்வித பேதமும் இன்றி அனைவரும் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டும்.
இலங்கை ஒரு பௌத்த நாடாகும். எனவே, புத்த சாசனத்தைப் பாதுகாப்பவர்களையே மக்கள் தெரிவு செய்வர்.
கடந்த காலங்களில் சுமார் 50 பௌத்த தேரர்களைக் கொலை செய்த ஜே.வி.பிக்கு மக்கள், ஆட்சி அதிகாரத்தை வழங்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
