கொழும்பின் புறநகர் பகுதி வாழ் மக்களுக்கு எச்சரிக்கை
கொழும்பின் புறநகர் பகுதி வாழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படடுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுலில் உள்ள போதிலும், திருடர்களின் அட்டகாசம் அதிகரத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வத்தளை, மாபோல பிரதேசத்தில் உள்ள அலவலகம் ஒன்றில் நள்ளிரவு வேலையில் புகுந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்த பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.
சுமார் ஒன்றரை லட்ச ரூபா பணம் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக அலுவலக உரிமையாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து வத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.