பாதுகாப்பாக இருக்கவும்..! இன்றிரவு 11மணி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளுக்கு பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (01) நண்பகல் 12.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவித்துள்ளது.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திறைசேரி அதிகாரியின் மர்ம மரணம்! உடலில் பல வெட்டுக்காயங்கள் - வெளியான தகவல்
பலத்த காற்றும் வீசக்கூடும்
இதன்படி, பிற்பகல் 1.00 மணிக்கு மேல், சபரகமுவ, மத்திய, ஊவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், குருநாகல் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் பலத்த மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே மின்னல் அபாயங்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திறைசேரி அதிகாரியின் மர்ம மரணம்! உடலில் பல வெட்டுக்காயங்கள் - வெளியான தகவல்