நுவரெலியாவில் உறைபனி பொழிவு: சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நுவரெலியாவில் சில இடங்களில் கடுமையான துகள் உறைபனி பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் இன்று(22.01.2026) 3.5 °C ஆக மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, மாலை நேரத்தில் கடுமையான மூடு பனி நிலவி வருவதால் நுவரெலியா -ஹட்டன் பிரதான வீதி, நுவரெலியா - கண்டி பிரதான வீதி மற்றும் நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் முழுமையாக மூடிய மூடுபனியால், வாகன சாரதிகள் தங்கள் வாகனத்தை குறைந்த வேகத்தில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி இயக்க வேண்டும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மேலும், கடும் பனி மற்றும் குளிரால் கிராம பகுதிகளில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலையில் உறைபனி நிலவும் நேரங்களில் பிரதான வீதியில் வாகனங்களை ஓட்டும்போது அதிகம் வழுக்கும் அபாயம் இருப்பதால், போக்குவரத்து ஒழுங்குமுறைகளைப் பேணுமாறு அந்தந்தப் பகுதிகளுக்கு பொறுப்பான பொலிஸார் சாரதிகளை அறிவுறுத்தியுள்ளனர்.
காலை முதல் மாலை வரை கடும் உஷ்ணமான காலநிலையுடன் வெயிலும், மாலை முதல் மறுநாள் அதிகாலை வரை வழக்கத்திற்கு மாறாக கடுங்குளிரும் நிலவி வருவதாக கூறப்படுகிறது.


1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri