மட்டக்களப்பில் தாழ்நிலப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் தென்கிழக்கே நிலவிய சுழற்சியானது தாழ்வுப் பகுதியாகி அதே இடத்தில் நீடிப்பதன் காரணமாக தொடர்ச்சியாக மழையினை எதிர்பார்க்கமுடியும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
கன மழையால் விவசாயிகள் பாதிப்பு
நேற்று(16.02.2026) மாலை தொடக்கம் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நிலைமைகள் ஏற்படும் நிலைமை காணப்படுகின்றது.

அதிலும் குறிப்பாக தாழ்நிலங்கள் வெள்ள நீரினால் மூழ்கும் நிலைமையேற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடைகள் நடைபெற்றுவருவதன் காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், அறுவடை செய்தவர்கள் நெல்லை பாதுகாப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam