தனியார் பேருந்து உரிமையாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
இந்த வார இறுதிக்குள் அனைத்து தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த வாரத்திற்குள் தனியார் பேருந்து நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் கெமுனு விஜெரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கத்திடம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தனியார் பேருந்து பணியாளார்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகக்கூடியவர்கள் என்பதால் அவர்களுக்கு சுகாதாரத் துறையினரை போன்று தடுப்பூசிகள் செலுத்தப்படவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
தனியார் பேருந்து சேவையில் சுமார் 45,000 பணியாளர்கள் உள்ளனர்,
இதேவேளை ரயில்வே துறையினருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை என்றும்
கெமுனு விஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
