வெப்பமான வானிலை குறித்து மீண்டும் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் நாளை (27) வெப்பநிலை குறித்து அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மனித உடலால் உணரப்படும் வெப்பம்
வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பம் இவ்வாறு அதிகரிக்கக்கூடும்.
எனவே போதிய அளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், பொது வௌியில் கடுமையான உழைப்பை குறைத்தல் போன்ற சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |