20 வருடங்களாக குடிசையாக இருக்கும் தமிழ் பாடசாலை
பதுளை (Badulla) பிங்கரவா தமிழ் வித்தியாலயத்தின் கற்றல் செயற்பாடுகள் 20 வருடங்களாக குடிசைகளில் இடம்பெறுவதாக அந்த பாடசாலை சமூகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மழைக் காலங்களில் இந்த குடிசைகளுக்குள் மழை நீர் வடிந்து புத்தகங்கள் சேதமடைவதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த பாடசாலையை பார்வையிட்டு சென்ற அரசியல்வாதிகள் இதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, விரைவாக இந்த பாடசாலை எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தரும் படி குறித்த பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |